வெள்ளி, 17 ஏப்ரல், 2026

தண்ணீர்த் தகராறு - கவிதை

 தண்ணீர்த்  தகராறு    - கவிதை 

---------------


ராத்திரி இழுத்துவிட்ட

வாய்க்கால் தண்ணி 

அடுத்தவன் வயலுக்கு 

மாத்திப் பாயுது  


பக்கத்து வயலும் 

பசியாறப் பார்த்து 

இந்த வயலுக்கு 

எரிச்சல்  இல்லை 


கண்மாய்த் தண்ணீ 

பிரிச்சு விட்ட 

கணக்கு நேரம் 

தவறிப் பாய்வதால்   


அறுவடை நெல்லோட 

கணக்குத் தவறுமுன்னு   

வாய்க்கால்  சண்டை 

வரப்பிலே  நடக்குது 


---------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories/Articles in Tamil and English 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாய்க்கிழவி - பட விமரிசனம்

  தாய்க்கிழவி - பட விமரிசனம்  ------- படம் பார்க்கிற ரெண்டு மணி நேரத்திலே, ஸ்மூலில் தமிழ்ப் பாட்டு பாடி ப்ராக்டிஸ் செய்யலாம் , டோஸ்ட்மாஸ்டர்...