வேரை மறந்த மரம் - கவிதை
---------
நெளிஞ்சு இருந்தாலும்
நிறைகுடம் தளும்பாது
நேராய் இருந்தாலும்
குறை குடம் கூத்தாடும்
ஆங்கில இலக்கியம்
படிச்சு இருக்கியா
அமெரிக்கா எல்லாம்
போயி இருக்கியா
ஆயிரம் பக்கம்
எழுதி இருக்கியா
வீட்டை மறந்த
ஆணவப் பேச்சில்
வேரை மறந்த
மரத்தின் வீழ்ச்சி
விறகுக் கடையில்
விற்றுக் கரியாகும்
-----------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக