வரவும் செலவும் - கவிதை
-------------
வருவேன் என்று சொல்லிவிட்டு
வராமல் இருந்தால் பரவாயில்லை
பேசுவேன் என்று சொல்லிவிட்டு
பேசாமல் இருந்தால் பரவாயில்லை
சிரிப்பு ஒன்றை மட்டும்
செலவழித்து விட்டுப் போகிறாய்
எந்தக் கணக்கில்
எழுதுவது என்று தெரியாமல்
சேமித்து வைத்திருக்கிறேன்
செலவு செய்ய வழியில்லை
----------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக