புத்தாண்டு சபதம்
-------------------------------------------------------------------------------------------
ஜனவரி ஒண்ணாம் தேதி
புத்தாண்டு சபதம் எடுத்துட்டு ரெண்டாம்
தேதியே அதை காப்பாத்த முடியாதவங்க ரெம்பப்
பேரு இருக்காங்க. அதுக்காக அவங்களை குத்தம் சொல்றது
ரெம்பத் தப்புங்க. அவங்க சூழ்நிலையை யோசிச்சுப்
பாக்கணும்.
இப்ப பள்ளிக்கூடப் பையன்
ஒருத்தன் இனிமே அன்னன்னிக்கு பாடத்தை
அன்னன்னிக்கே படிச்சுடணும்னு முடிவு
பண்றான்னு வச்சுக்குங்க. அன்னைக்கு பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடனே
அவன் தெருப் பசங்க எல்லாம்
அவனை கிரிக்கெட் விளையாடக் கூப்பிட்டா அவன் என்ன பண்ணுவான்
பாவம். விளையாண்டு முடிச்சு
வந்தவுடனே டிவியிலே நல்ல படமா போட்டுத்
தொலைக்கிறாங்க. குடும்பமே உட்கார்ந்து பாக்கிறப்போ இவன் மட்டும் தனியா
போயி உட்கார்ந்து படிக்க முடியுமா . அவனைக்
குத்தம் சொன்னா எப்படி.
அப்புறம் ஆபீசிலே வேலை பாக்கிறவங்க
சில பேரு இனிமே ஆபீசுக்கு
கரெக்ட் டயத்துக்கு போகணும்னு உறுதி எடுக்கிறாங்க. ஆனா
புத்தாண்டு பார்ட்டி மறுநாள் அதி காலை
ரெண்டு மணி வரைக்கும் நீண்டுக்கிட்டே
போகுது . அதுக்குப் பிறகு வீட்டுக்கு வந்து
எட்டு மணி நேரம் தூக்கமாவது
போட வேண்டியிருக்கு. பத்து
மணிக்குத்தான் முழிப்பே
வர்றது . அப்புறம்
எப்படி பத்து மணிக்கே ஆபீசிலே
இருக்க முடியும். குளிக்க வேணாமா. சாப்பிட
வேணாமா. நல்ல டிரெஸ் போட்டு
ஆபீஸ் போகணுமா இல்லையா. அப்புறம்
எப்படி கரெக்ட் டயத்துக்கு ஆபீஸ்
போக முடியும். அவங்களைப் போயி குத்தம் சொல்லலாமா.
இந்த குடும்பத் தலைவர்
ஒருத்தர் கணவரா பொறுப்பா மனைவியை
இனிமே மாசம் ஒரு தரம்
சினிமா கூட்டிட்டுப் போகணும்னு புத்தாண்டு உறுதி எடுத்துக் கிறாரு . நல்ல
படத்திற்கு ஒரு வாரம் முன்னாலே
ரிசர்வ் பண்ண வேண்டியதா இருக்கு.
இந்த தியேட்டர் ஓனர்கள் இவரு உறுதியைத்
தெரிஞ்சுக்கிட்டு இவருக்கு ரெண்டு சீட்டு வச்சிருக்க
வேணுமா வேணாமா. பண்ண மாட்டேங்கிறாங்க.
டிக்கெட் தீர்ந்து போச்சுங் கிறாங்க . இவர் என்ன பண்ணுவாரு
சொல்லுங்க. பாவம்.
இப்படியே தாங்க புத்தாண்டு சபதம்
எடுத்துக்கிறவங்க எல்லாம் சூழ்நிலை
சந்தர்ப்பங்களாலே அதை நிறைவேத்த முடியாம தவிக்கிறாங்க. அவங்களைப்
போயி குத்தம் சொல்றது ரெம்ப
ரெம்ப தப்புங்க.
----------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி