தாத்தாப் பாட்டு
----------------------------
பாப்பாக் களுக்காகப்
படைக்கப் பட்டவர்கள்
தூக்கி வைத்து
தொட்டில் ஆனவர்கள்
தூங்க வைத்து
கட்டில் ஆனவர்கள்
மறந்து போய் விட்ட
மழலை வாழ்க்கையை
பேரன் பேத்தியின்
பிறப்பில் பார்ப்பவர்கள்
---------------------------------நாகேந்திர பாரதி