சனி, 19 ஜூலை, 2025

கருக்காத மேகம் - கவிதை

 கருக்காத மேகம்  - கவிதை 

-------------------------


இந்த வருஷமும் 

தவறாமல் வருகை தந்த  


கூழைக்கடா, கொக்கெல்லாம் 

தேடிப் பார்த்தாலும் 


பச்சைப் பயிராக 

ஒண்ணுத்தையும் காணோம் 


உள்ளூரில் கஷ்டப்படும் 

உழவன் வயிற்றையே 


மதிக்காத மேகமெல்லாம் 

கருப்பாக மாறாது 


ஊரு விட்டு ஊரு வந்த 

பறவையின் பசிக்காக 


----------------------நாகேந்திர பாரதி 



My Poems in Tamil and English  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வீட்டுத் திண்ணை - கவிதை

வீட்டுத் திண்ணை - கவிதை  ------------------ பசுஞ்சாணி பூசிவிட்டு  மண்ணை  மெழுகி விட்டு  வீட்டோரத் திண்ணைக்கு  கோலமும் போட்டு வச்சா  ஊருக்கு ...