கருக்காத மேகம் - கவிதை
-------------------------
இந்த வருஷமும்
தவறாமல் வருகை தந்த
கூழைக்கடா, கொக்கெல்லாம்
தேடிப் பார்த்தாலும்
பச்சைப் பயிராக
ஒண்ணுத்தையும் காணோம்
உள்ளூரில் கஷ்டப்படும்
உழவன் வயிற்றையே
மதிக்காத மேகமெல்லாம்
கருப்பாக மாறாது
ஊரு விட்டு ஊரு வந்த
பறவையின் பசிக்காக
----------------------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக