சனி, 19 ஜூலை, 2025

வீட்டுத் திண்ணை - கவிதை

வீட்டுத் திண்ணை - கவிதை 

------------------


பசுஞ்சாணி பூசிவிட்டு 

மண்ணை  மெழுகி விட்டு 


வீட்டோரத் திண்ணைக்கு 

கோலமும் போட்டு வச்சா 


ஊருக்கு விருந்தாளி 

வந்தாக்க  உட்கார்ந்து 


ஆசுவாசம் செய்றதுக்கு 

அரட்டை நடிக்கிறதுக்கு 


சாராய வாசனையோடு 

சீட்டுக் கட்டோடு 


சாயந்திரம் வந்தார்கள் 

அயலூர்ப் பெருசுகள்


மறுநாள் திண்ணை 

வெறும் மண் திண்ணை 


------------------நாகேந்திர பாரதி 


My Poems in Tamil and English  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அசோகமித்திரன் பரிசுக் கதைகள் மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு

 அசோகமித்திரன் பரிசுக் கதைகள் மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு  --------------------  நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே .  ஒரு   நாள் ...