செவ்வாய், 8 அக்டோபர், 2024

இரக்கம் - கவிதை

 இரக்கம் - கவிதை 

------------------

ஓரக் குடை வழி

ஒழுகும் மழைநீரில்


பேண்டு நனைந்திட

பிழைத்த சட்டையோடு


காற்றில் பறக்காமல்

குடையை இறுக்கியபடி


ஓரத்தில் நிற்போர்க்கு

இரக்கப் பார்வையோடு


விரைந்து நடக்கையில்

விரல் ஒன்று நீளும்


குடைக்குள் இடம் கேட்கும்

குறியீட்டை ஒதுக்கி விட்டு


விரையும் வேகத்தில்

கரையும் இரக்கம்


--------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திஜர சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 திஜர சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு ----------------------------- ‘நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே . ‘வீட்டுக்குள்ளே ப...