ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

கத்தாழை முள் - கவிதை

 கத்தாழை முள் - கவிதை 

———-


காட்டுக் கத்தாழையைச்

சாட்சியாய் வைத்துக்


கீறிய பெயர் காட்டிக்

காதல் என்றேன் நான்


வடிந்த பால் காட்டிக்

கண்ணீர் என்றாய் நீ


செடிக்கும் வலிக்கும்

சேதியும் புரிந்தது


உனக்குள் இருக்கும்

மென்மையும் புரிந்தது


மனதிற்குள் கத்தாழை

முள்ளாய்க் குத்தியது


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலி போகும் நேரம் - கவிதை

 வலி போகும் நேரம் - கவிதை  -------------------------------- முற்றிய முதுமை நோயில் முனகும் அவள் கண்ணுக்குள் முதலிரவுக் கணவன் முகம் முதற்பிள்ள...