விடியலின் நம்பிக்கை - கவிதை
——
(கவிதை வனம் குழுவில் )
போகின்ற சூரியனும்
காலையில் திரும்புவான்
தேய்கின்ற சந்திரனும்
திரும்பவும் வளர்வான்
உதிர்கின்ற பூவுக்குள்
உருவாக்கும் விதை உண்டு
விழுகின்ற மழையால்தான்
விளைகின்ற பயிரெல்லாம்
போவதும் தேய்வதும்
உதிர்வதும் விழுவதும்
இயற்கையின் வழியிலே
எழும்பிட மலர்ந்திட
துன்பத்தின் தொடர்ச்சியாய்
வருவது இன்பமே
விடியலை நம்பிடு
விழுந்ததும் எழுந்திடு
——- நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக