சமூகத்தின் சிற்பி - கவிதை
———
(கவிதை வனம் குழுவில் )
எண்ணத்தில் தூய்மையும்
வாக்கில் உண்மையும்
செயலில் நேர்மையும்
சேர்ந்த எல்லோரும்
செதுக்கிச் சமைத்த
சமூகத்தின் சிற்பிகள்தான்
நேற்றிருந்த அவர்களும்தான்
இன்றிருக்கும் நாமும்தான்
நாளை வரும் மக்களுக்கும்
வழிகாட்டும் வாழ்க்கைதான்
——நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக