திங்கள், 10 பிப்ரவரி, 2025

ஒரே கேள்வி - கவிதை

ஒரே கேள்வி - கவிதை 

——

‘நா யாரு ’

கேட்டவள் அம்மா


நினைவை இழுக்கும்

முயற்சியில் குழந்தை


வளர்ந்தது குழந்தை

தேய்ந்தது தாய்மை


‘ நா யாரு ’

கேட்பவள் குழந்தை


நினைவை இழந்த

தளர்ச்சியில் அம்மா


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீ வந்த போது - கவிதை

 நீ வந்த போது - கவிதை  ------------------------ மேகப் பொதியில் ஒன்று மெத்தென மோதியது போல் தூறல் மழைச் சாரல் தொட்டுத் தடவியது போல் தெக்குத் த...