நீ வந்த போது - கவிதை
------------------------
மேகப் பொதியில் ஒன்று
மெத்தென மோதியது போல்
தூறல் மழைச் சாரல்
தொட்டுத் தடவியது போல்
தெக்குத் தென்றல் என்னைத்
தேடி வந்தது போல்
முல்லைப் பூவின் வாசம்
மூச்சில் நிறைந்தது போல்
பக்கம் நீ வந்து மெல்ல
பட்டு அமர்ந்த போது
-----------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக