ஓடோடி உழைத்து - கவிதை
-----------------------------------
ஓடோடி உழைத்து
ஓடாகிப் போவதெல்லாம்
வீட்டுக்கும் நாட்டுக்கும்
வெளிச்சம் தருவதற்கே
தந்த வெளிச்சத்தின்
தயவில் குளிர் காய்ந்து
சும்மா இருக்கின்ற
சோம்பேறிக் கூட்டத்தின்
சொகுசைக் குலைத்து
சுறுசுறுப்பாய் ஆக்குதற்கு
விரட்டி வேலை வாங்கும்
வித்தையும் கற்றால் தான்
ஓடோடி உழைத்ததின்
உண்மைப் பலன் கிட்டும்
------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக