ஆற்றின் போக்கு
----------------------------
பாதி நாரும்
பாதிப் பூவுமாக
ஆடிப் போகிறது
ஆற்றில் மாலை
வரவேற்பு மாலையா
வழியனுப்பு மாலையா
ஏதேதோ நினைவுகளை
எழுப்பிப் போகிறது
சொன்னால் மட்டும்
புரியவா போகிறது
ஆற்றின் போக்கு
அதன் போக்கு
-------------------------நாகேந்திர பாரதி