ஏன் கவிதை, என் கவிதை - கவிதை
-----------------------
தாலாட்டும் குயில்களும், தலையாட்டும் மரங்களும்
கேட்கிறதே என் கவிதை , என் செய்வேன்
நீரோடும் நதிகளும் , நிழலாடும் மீன்களும்
கேட்கிறதே என் கவிதை , என் செய்வேன்
சுழல்கின்ற பூமியும், சுற்றுகின்ற சந்திரனும்
கேட்கிறதே என் கவிதை, என் செய்வேன்
வீசுகின்ற தென்றலும், வீழ்த்துகின்ற பெண்மையும்
கேட்கிறதே என் கவிதை, என் செய்வேன்
பரம்பொருளைத் தினந்தேடிப் பரிதவிக்கும் ஆத்மாவும்
கேட்கிறதே என் கவிதை , என் செய்வேன்
-------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக