சித்திரை நினைவு - கவிதை
————
அறுசுவை உணவில்
வேப்பம்பூ அவசியம்
அப்பளம் வடையோடு
பருப்புப் பாயாசம்
காலையில் கோயில்
மாலையில் சினிமா
ஊட்டி வளர்த்தோரும்
கூட்டிச் சென்றோரும்
சித்திரை நினைவில்
சித்திரம் ஆயினர்
—-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக