காகிதக் கப்பல் - கவிதை
-----------
(கவிதை வனம் குழுவில் )
பிஞ்சு விரல்களின்
வளைவுக் கலை ஒன்று
ஓடும் நீரின்
உணர்வைப் புரிந்தபடி
வளைந்தும் நெளிந்தும்
செல்லும் பாதையில்
கல்லும் முள்ளும்
இடறும் நேரம்
கண்ணீர் விடுகின்ற
காகிதக் கிழிசலின்
உணர்வைப் புரிந்து
உருகும் குழந்தை
வாழ்க்கை ஓட்டத்தில்
கலக்கும் போது
காகிதக் கப்பலை
நினைத்துப் பார்க்கும்
காலம் வராமல்
கடவுள் காக்கட்டும்
——நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக