திங்கள், 10 பிப்ரவரி, 2025

நீ வந்த போது - கவிதை

 நீ வந்த போது - கவிதை 

------------------------

மேகப் பொதியில் ஒன்று

மெத்தென மோதியது போல்


தூறல் மழைச் சாரல்

தொட்டுத் தடவியது போல்


தெக்குத் தென்றல் என்னைத்

தேடி வந்தது போல்


முல்லைப் பூவின் வாசம்

மூச்சில் நிறைந்தது போல்


பக்கம் நீ வந்து மெல்ல

பட்டு அமர்ந்த போது


-----------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English   


கோலம் - கவிதை

 கோலம் - கவிதை 

———

அவள் போட்ட

கோலத்தின் நடுவே

பூசணிப்பூ வைக்கும்

பொறுப்பு அவனது


அந்த ஊருணித் தோட்டத்தில்

பூத்த பூவெல்லாம்

காயாகிப் பழுத்த

காலமும் ஆனது


அவன் கனவுத் தோட்டத்தில்

பூத்த பூவெல்லாம்

சருகாய் ஆனது

கோலமும் போனது


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


ஏதோ - கவிதை

 ஏதோ - கவிதை 

——

ஏதோ ஒரு வித்து

விழுந்தது எழுந்தது


ஏதோ சில பேர்

வளர்த்தது வாழ்ந்தது


ஏதோ ஒரு சம்பவம்

மாற்றியது ஏற்றியது


ஏதோ ஒரு திருப்பம்

சறுக்கியது இறக்கியது


ஏதோ ஒரு வாழ்க்கை

நடந்தது முடிந்தது


ஏதோ ஒரு இடத்தில்

எரித்ததோ புதைத்ததோ


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


ஒரே கேள்வி - கவிதை

ஒரே கேள்வி - கவிதை 

——

‘நா யாரு ’

கேட்டவள் அம்மா


நினைவை இழுக்கும்

முயற்சியில் குழந்தை


வளர்ந்தது குழந்தை

தேய்ந்தது தாய்மை


‘ நா யாரு ’

கேட்பவள் குழந்தை


நினைவை இழந்த

தளர்ச்சியில் அம்மா


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


நீ வந்த போது - கவிதை

 நீ வந்த போது - கவிதை  ------------------------ மேகப் பொதியில் ஒன்று மெத்தென மோதியது போல் தூறல் மழைச் சாரல் தொட்டுத் தடவியது போல் தெக்குத் த...