திங்கள், 16 செப்டம்பர், 2024

வலி போகும் நேரம் - கவிதை

 வலி போகும் நேரம் - கவிதை 

--------------------------------


முற்றிய முதுமை நோயில்

முனகும் அவள் கண்ணுக்குள்


முதலிரவுக் கணவன் முகம்

முதற்பிள்ளை பிரசவ நாள்


அப்பாவின் அமைதி முகம்

அம்மா சுட்ட தோசை


அலுவலக நண்பர் அரட்டை

ரெயிலுக்கு ஓடிய ஓட்டம்


தங்கச்சி கல்யாண மண்டபம்

மதுரை சென்னை கோவை


தம்பி படித்த கல்லூரி

வீட்டு மாடி நிலா


பாட்டி பாடிய பாட்டு

டிவி சினிமா நாடகம்


கோயில் கோபுரம் சூடம்

சலங்கை சத்தம் பாட்டு


வெயில் காற்று மழை

விண் விண் வலி


காட்சியும் உணர்ச்சியும் கலந்து

காணாமல் போகும் வலி


------------------நாகேந்திரபாரதி


My Poems/Stories in Tamil and English 


ஒற்றைச் செருப்பு - கவிதை

ஒற்றைச் செருப்பு - கவிதை 
———-
கலவர அவசரத்தில்
கழன்று விழுந்ததா

ஓடும் பஸ்ஸில்
உதறி விழுந்ததா

வேண்டாம் என்று
விட்டு எறிந்ததா

கொஞ்ச தூரத்தில்
ஜோடி கிடக்குமென

எடுத்துப் போகிறான்
ஏழை ஒருவன்

———-நாகேந்திர பாரதி




ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

தோட்டத்துப் பூ - கவிதை

 தோட்டத்துப் பூ - கவிதை 

------------------


மணத்தைப் பரப்பி விட்டு

மண்ணுக்கு வா என்றது

மண்ணில் கிடந்த சருகு ஒன்று


இன்னும் கொஞ்ச நாள்

இருந்துவிட்டு வருகிறேன் என்றது

இன்று பூத்த பூ ஒன்று


அது காற்றின் கையிலும்

அதோ அந்தக் கடவுள் கையிலும்

என்றது சருகு


அந்தக் கடவுள் கையில்

பூக்கூடையோடு

வந்து கொண்டு இருந்தார் .


-------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


சூழலும் சுழலும்- கவிதை

 சூழலும் சுழலும்- கவிதை 

-------------------------


குளத்தில் மூழ்கிய கல்லாக

மூழ்கிப் போனான்

முண்டாசுக் கவிஞன்

வறுமைச் சூழலாய்


விழுந்த கல் அதிர்வு

விரிந்து விரிந்து

கரையைத் தாண்டி

கவிதைச் சுழலாய்


-----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வியாழன், 5 செப்டம்பர், 2024

ஒத்தைப் பனை மரம் - கவிதை

ஒத்தைப் பனை மரம் - கவிதை 

-------------------------

கள்ளு இறக்கிய காலத்தில்

காத்துக் கிடந்தவர் பல பேர்


கதிர் அறுத்த காலத்தில்

கஞ்சி குடித்தவர் பல பேர்


காஞ்சு போன காலத்தில்

மட்டை உரித்தவர் சில பேர்


உறிஞ்சு விழும் சட்டத்தில்

முதுகு சொறிந்தவர் சில பேர்


கூட இருந்த பனையெல்லாம்

விறகாகவும் வீடாகவும்


ரோடு தெரிகிறது

பஸ் சப்தம் கேட்கிறது


பஸ்சுக்குள் ஒரு பையன்

கை அசைப்பது தெரிகிறது


ஒத்தைப் பனைமரம் இன்னும்

எத்தனை நாளைக்கு


-------------------நாகேந்திர பாரதி



My Poems/Stories in Tamil and English 


வலி போகும் நேரம் - கவிதை

 வலி போகும் நேரம் - கவிதை  -------------------------------- முற்றிய முதுமை நோயில் முனகும் அவள் கண்ணுக்குள் முதலிரவுக் கணவன் முகம் முதற்பிள்ள...