திங்கள், 31 ஆகஸ்ட், 2026

அழுகைத் தொடர்- கவிதை

 அழுகைத் தொடர்- கவிதை 

------

வயக்காட்டுக் கூலி வேலை முடித்து

வயித்துப் பாட்டுக் காசு கையில் வாங்கி


சாராயக் கடை வாசலிலே கிடக்கும்

போதை ஏறிய புருஷனைத் தாங்கி


வீட்டுக்குள் நுழையும்போது விளம்பரம்

அரசாங்கத் தொலைக்காட்சிப் பெட்டியிலே


நகையை அடகு வைக்க வேணாம்

விக்கிறதே உங்களுக்கு நல்லது


அரிசியை உலையில் கொதிக்க விட்டாள்

அழுகைத் தொடர் பார்க்க ஆரம்பித்தாள்


---------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திறந்த கதவுகள் -குறுங்கதை

 திறந்த கதவுகள் -குறுங்கதை  ---------- பாழடைந்த அந்தக் கோயிலின் மரக்கதவுகள் கிரீச் சப்தத்துடன் திறக்கப் படுவதை எதிர்பார்த்துக் காத்திருந்தது...