அளவுகோல்கள்- கவிதை
-------
தன்னை அளப்பதற்குத்
தயாரித்த அளவுகோலை
மற்றவரை அளப்பதற்கு
மாற்றி முயற்சித்தால்
வளையும் நெளியும்
ஒடியும் உடையும்
அளவுகோல் இழப்பது
அவரவர் இஷ்டம்
அவரவர் கையில்
அவரவர் அளவுகோல்
---------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக