கல்லறை பேசினால் - கவிதை
—————————————-------------
தள்ளாத வயதினிலும்
தாங்கித் தாங்கி
நடந்து வந்து
உண்மையான தர்மத்தை
உபதேசம் செய்தேனே
மதச் சண்டை மாறவில்லை
சாதிச் சண்டை தீரவில்லை
பெண்ணடிமை போகவில்லை
பெருஞ்செல்வம் பிரியவில்லை
பேச்சு மட்டும் போகவில்லை
இன்னும் ஒருமுறை நான்
எழுந்து வரப் போவதில்லை
என் காலம் போயாச்சு
உங்க காலம் ஆயாச்சு
பொழைக்கத் தெரியலைன்னா
போங்கடா வெங்காயம்
———————நாகேந்திர பாரதி
சூப்பர் கவிஞரே
பதிலளிநீக்குஅறம்...?
பதிலளிநீக்கு