முன்னாடி திரும்பு - கவிதை
—————————------------------------
கட்டம் போட்ட சேலை
கவ்வுதடி இடுப்பை
கொண்டை மேலே பூவு
கொல்லுதடி வாசம்
ஏத்தி வச்ச குடத்தில்
தளும்புதடி மனசு
குளத்தங்கரை வராத
கோபமாடி பொண்ணே
நெத்திச்சுட்டி வாங்கியாற
நேரமாச்சு புள்ளே
உனக்குப் புடுச்சதுன்னு
சொன்னியேடி நேத்து
மாலைக் கருக்கலு
மயக்குதடி என்னை
பின்னழகு காட்டி
பித்தனாக்கிப் போட்டே
முன்னழகு வேணுமடி
முன்னாடி திரும்பு
————நாகேந்திர பாரதி
ஓகோ...!
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு