மீதியான பக்கங்கள்- கவிதை
———————————----------——
ஆரம்பப் பக்கங்கள்
அற்புத மானவைதான்
அரண்மனை வீடும்
ஆளும் பேருமாய்
படிப்பும் பாட்டும்
பாசமும் நேசமுமாய்
அழுக்குப் படிந்தது
எப்போது பக்கங்களில்
அவனைப் பார்த்த
அந்தப் பொழுதிலா
அவனைச் சேர்ந்த
அந்திப் பொழுதிலா
புரண்ட பக்கங்கள்
புரட்டிப் போட்டன
ஓடிப் போனதால்
ஒழுக்கம் போனதால்
மீதிப் பக்கங்கள்
கசங்கிக் குப்பையில்
——————நாகேந்திர பாரதி
அருமை கவிஞரே
பதிலளிநீக்குஒழுக்கம் தவறக் கூடாதே...
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு