மண்ணில் வானவில் - கவிதை
————————————----------------------------—-
ஏழுவண்ண வானவில்லாய்
இந்த மண்ணில் முளைத்து
ஏழுவித குணங்களாய்
எங்களுக்குக் காட்டி
அன்பும் அறிவும்
அமைதியும் ஆனந்தமும்
உண்மையும் உழைப்பும்
உயர்வும் காட்டி
எங்களை விட்டு
இறைவனைத் தொட்டு
எப்போ தாவது
இறங்கி வந்து
வானத்து வில்லாய்
வாழ்த்துவார் அப்பா
—————நாகேந்திர பாரதி
அப்பாவின் வாழ்த்து - என்றென்றும் உண்டு. கவிதை நன்று.
பதிலளிநீக்குஅருமை... அருமை...
பதிலளிநீக்கு