கடந்து சென்ற தென்றல் - கவிதை
—————————--------------------------——-
துண்டோடு சேத்து
பனியன் ஜட்டியும்
கழட்டிப் போடுடா
துவைச்சுப் போடுறேன்
அறுபது வயதிலும்
குறையாத அன்போடு
குழந்தையாய் நினைத்து
அப்பத்தா சொன்னது
ஊட்டி விட்டது
உறங்க வைத்தது
படிக்க வைத்தது
பழக வைத்தது
வேலை தேடி
வெளிநாடு போனது
ஓலை வந்ததும்
ஓடி வந்தது
சுடுகாட்டில் கிடந்த
சேலை மூட்டையைக்
கட்டி அழுதது
மயங்கி விழுந்தது
நடந்து வந்த
நினைவாய் நின்றது
கடந்து சென்ற
தென்றல் ஒன்று அது
———————நாகேந்திர பாரதி
அருமை....
பதிலளிநீக்கு