விளைந்த வியர்வைகள் - கவிதை
—————————————---------------——
விதைகள் மட்டுமா
விளைந்து செழிக்கும் ,
வியர்வைகளும் கூடத்தான்
கூட்டிப் பெருக்கிக்
குப்பை கழிக்கும்
வீட்டம்மா வியர்வை
காட்டைத் திருத்திக்
கழனி ஆக்கும்
வீட்டய்யா வியர்வை
நாட்டில் நிலவும்
நச்சைப் போக்கும்
நாட்டய்யா வியர்வை
வீடும் நாடும்
விளங்க உழைக்கும்
வீரர் வியர்வை
எல்லாம் சேர்ந்து
விளைந்து செழிக்கும்
—————நாகேந்திர பாரதி
அருமை....
பதிலளிநீக்கு