கலைத் திருவிழா
-------------------------------------------
பறவைகளின் சப்தமும்
பாப்பாக்களின் சப்தமும்
கலந்து ஒலிப்பது
கர்நாடக சங்கீதம்
செடிகளின் ஆட்டமும்
குழந்தைகளின் ஆட்டமும்
சேர்ந்து நடப்பது
பரத நாட்டியம்
எல்லா மாதங்களும்
கலைத் திருவிழாதான்
இயற்கைத் தாயின்
பூங்கா மேடையில்
------------------------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக