சுற்றுப் பிரகாரம்
-------------------------
கர்ப்பக் கிரகத்தை விட
சுற்றுப் பிரகாரம் சுகமானது
காற்றும் அதிகம்
கடவுளரும் அதிகம்
உள்ளிருக்கும் கடவுளுக்கு
தீப ஒளி அவசியம்
வெளியிருக்கும் கடவுளர்க்கு
வெளிச்சமெல்லாம் போதும்
உரசாமல் கொள்ளாமல்
உட்கார்ந்தும் கும்பிடலாம்
-------------------------------நாகேந்திர பாரதி
அருமை...
பதிலளிநீக்குநமக்குள்ளும் தீப ஒளி அவசியம்...