துரோகச் செயல்
------------------------
வளர்த்த கடா
காதிலே முட்டியது
பேட்டரி போடுவது நாம்
முள்ளைத் திருப்புவது நாம்
கீயைக் கொடுப்பது நாம்
இருந்தும் காலையிலே
கிர்ரென்று அடித்து
காதைத் துளைக்கிறதே
தலையில் தட்டுவதைத் தவிர
வேறு வழி தெரியவில்லை
-------------------------------------------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக