திங்கள், 20 நவம்பர், 2023

கோழிக் குஞ்சுகள் - கவிதை

 கோழிக் குஞ்சுகள் - கவிதை 

--------------------------------

தவுட்டுப் பானைக்குள் 

நாங்கள் 

தவழ்ந்து வந்த நாள் 


உன் 

இறக்கைச் சூட்டில் 

இளகிய ஓட்டை 

உடைத்து வந்த நாள் 


இரவுக்குள் 

உன் சிறகுக்குள் 

நாங்கள் மூக்கை மட்டும் நீட்டி 

முழித்து முழித்துத் தூங்குவதை 

நீ 

தூங்காமல் ரசித்திருப்பாய் 


நீ 

'கெக்கே ' கெக்கே ' என்றால் 

உணவுண்ண அழைப்பு 

'கேக்கேக் ' 'கேக்கேக் '  என்றால் 

பகையென்ற எச்சரிக்கை 


உன் 

கால்களின் 

வேகக் கிண்டலில் 

எங்கள் 

விருந்து எழும்பி வரும் 


நாங்கள் 

பிட்டம் ஆட்டி ஓடி வருவதை 

பெருமையுடன் பார்ப்பாய் 


நாங்களும் 

எங்கள் பிஞ்சுக் கால்களால் 

'விறுவிறு ' என்றால் 

விருந்து மறைந்து போகும் 


நீ 

கொத்திக் கொடுப்பாய் 

நாங்கள் 

கத்திச் சிரிப்போம் 


அந்தக் 

கழுகின் நிழலுக்கோ 

உன் இறக்கை விரியும் 

கால்கள் எழும்பும் 

கழுத்து உயரும் 


இப்படி எங்களை 

பொத்திப் பொத்தி வளர்த்தவளே 


அது எப்படி ?

நாங்கள் வளர்ந்த பின்னாலே 

எங்களைக் 

கொத்தி கொத்தி விரட்டுகிறாய் 


நாங்கள் 

தனியாக வாழ்ந்து பார்க்க 

தள்ளி வைக்கிறாயா 


தாங்கவில்லை அம்மா , 

உன் இறகு மடிக்கு 

இரவெல்லாம் 

ஏங்குகிறோம் 


---------------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


2 கருத்துகள்:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...