சனி, 18 நவம்பர், 2023

சா'தீ ' - கவிதை

 சா'தீ '  - கவிதை 

------------

சாகுபடி இல்லையென்றால் 

சாகும்படி தலையெழுத்து 

சோம்பேறிக் கோபத்தில் 

சாதிக்குச் சேதி வரும் 


போட்டுப் பார்த்துவிட 

புகை மூட்டிக் குளிர் காய 

காட்டுக் கூட்டமொன்று 

கச்சிதமாய் வேலை செய்யும் 


சாமியினைப் பிரித்து வைக்கும் 

சாலையினைத் தடுத்து வைக்கும் 

பேச்சுத்தீ வெறியாலே 

சாதித்தீ எரிய வைக்கும் 


குத்தீட்டி அரிவாளும் 

ரத்தத்தின் சுவை கேட்கும் 

பக்கத்து ஊரெல்லாம் 

பரவிவிடும் சாதிவெறி 


உணர்ச்சிக்கு இரையான 

உள்ளத்தில் அனல் ஏறும் 

உயிருக்கு உயிர் வாங்கும் 

ஊரெல்லாம் காடாகும் 


-------------------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...