தூங்காத பூங்கா - கவிதை
------------------------------
தூங்காத பூங்காவில்
தூங்குதற்குப் போகாதீர்
வேரோடும் விழுதோடும்
பழுப்புபச்சை இலையோடும்
வரியோடும் கிளையோடும்
வளர்ந்து நிற்கும் மரத்தோடும்
மென்பச்சைத் தண்டோடும்
மெலிதான வளைவோடும்
காற்றோடு கலந்தாடிச்
சிரிக்கின்ற செடியோடும்
மஞ்சளில் அத்தனையும்
சிவப்புக்குள் அத்தனையும்
நிறத்துக்குள் நிறம் பிரித்து
நெளிந்தாடும் பூவோடும்
சலசலக்கும் நீரோடை
சங்கீதக் குரலோடும்
விளையாடும் சிறுமியரின்
வாயோசைக் குழலோடும்
கண்ணுக்கும் காதுக்கும்
விருந்தளிக்கும் பூங்காவை
உண்ணுவதை விட்டு விட்டு
உறங்குதற்குப் போகாதீர்
--------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அழகு...
பதிலளிநீக்கு