அப்பாவி எதிரிகள் - கவிதை
-------------------------------
என் கழுத்து அறுபட்டபோது
உன் உறுப்பு அவமானப்பட்ட போது
ரத்தம் கொட்டியபோது
கோபம் கொப்பளித்தபோது
எனக்கு நீ எதிரியா
உனக்கு நான் எதிரியா
குண்டுமழை பொழிந்தபோது
கட்டிடங்கள் இடிந்தபோது
கூட்டமாய் அழிந்தபோது
குழந்தைகள் அழுத போது
எனக்கு நீ எதிரியா
உனக்கு நான் எதிரியா
கிழக்கும் மேற்கும் சேரும்போது
நானும் நீயும் மாறும்போது
எனக்கு நீ நண்பன்
உனக்கு நான் நண்பன்
--------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
நமக்கு நாமே எதிரி...
பதிலளிநீக்கு