பயந்தாங்குளி நிலா - கவிதை
----------------------------------------
நட்சத்திரங்கள் தடுத்தன
நிலாவை
சுடுகாட்டிலே ஆவி
காத்தெல்லாம் பிண நாத்தம்
மரத்திலே முனி
கண்மாயிலே கருவாய்
காட்டிலே கொள்ளிவாய்
சலங்கையோடு மோகினிப் பிசாசு
தெருவிலே பேய்
மலையெல்லாம் பூதம்
பயந்து போன நிலா
பூமிக்கு வரவில்லை
அமாவாசை அன்று
----------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக