வேண்டுதல் - கவிதை
-------------------------------------
வனகாளி அம்மன்
திருவிழா
கோயிலில்
ஆடு வெட்டிப் பலி
வீட்டில்
கோழிக் குழம்பு
மீன் வறுவல்
மாட்டுத்தோல் செருப்போடும்
பட்டுத் துணியோடும்
தெரு முழுக்கக் கூட்டம்
ஊர் கூடிப்
படையல் வைத்துக்
கும்பிட்டுக் கேட்கும்
எங்கள்
எல்லா உயிர்களையும்
காப்பாத்து ஆத்தா
---------------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
ஓம் சக்தி...
பதிலளிநீக்கு