குழந்தைக் குற்றம் - கவிதை
--------------------------------------
உருட்டும் பீடிக்குள்
சுருண்டு கிடப்பது எது
கொதிக்கும் தீக்குள்
சூடாய்த் தவிப்பது எது
வெள்ளரிப் பிஞ்சில்
வெம்பிக் கிடப்பது எது
சைக்கிள் பஞ்சரில்
பசையாய் ஒட்டுவது எது
ஹவுஸ்புல் டிக்கெட்
வியர்வை அழுத்தம் எது
கட்டிடம் உயர்த்தும்
கலவைக் குழம்பாய் எது
துறைமுக மூட்டை
முதுகுச் சுமையாய் எது
ரிக் ஷா மிதியில்
தேயும் செயினாய் எது
பள்ளிக் கூடம்
கழுவும் கண்ணீர் எது
கைகால் முளைத்த
குழந்தைக் குற்றம் அது
---------------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமை...
பதிலளிநீக்கு