செவ்வாய், 10 அக்டோபர், 2023

காலம் கடந்தாலும் - கவிதை

 காலம் கடந்தாலும் - கவிதை 

--------------------------------------

இறந்த காலம் , என்றோ

இறந்த காலம்


எதிர் காலம், கையில்

இறங்காக் காலம்



காலம் கடந்ததென்று

கவலையும் வேண்டாம்


எதிர்காலம் எப்படியென்ற

ஏக்கமும் வேண்டாம்


நிகழ் காலமே

நிதர்சனக் காலம்


இன்று நன்று என்று

எப்போதும் இருந்தாலே


எல்லாக் காலமுமே

இன்பக் கோலம்தான்


-------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...