புதன், 17 மே, 2023

தாய் மடி தேடுகிறேன் - கவிதை

 தாய் மடி தேடுகிறேன் - கவிதை 

—————————---------------------—

இங்கே கொஞ்சம் பாரேண்டி -என்

இதயப் பூவைத் தாரேண்டி

அங்கே இருந்தே சிரியேண்டி -என்

ஆசைப் பூவைப் பிரியேண்டி


சும்மா பாத்துப் போயேண்டி -நான்

சொக்கும் சுகத்தைத் தாயேண்டி

தம்மாத் தூண்டு பேசேண்டி - உன்

தமிழை என்மேல் பூசேண்டி


வேர்த்துப் போயிக் கிடக்கேண்டி - காதல்

வெக்கைத் தீயை அடக்கேண்டி

பார்த்துப் பார்த்து ஆசையடி - உன்

பாதம் காதல் ஓசையடி


பயந்து கிடந்து சாகுறேண்டி - உன்னைப்

பார்த்துப் பைத்தியம் ஆகுறேண்டி

நயந்து பேசத் தயங்குறேண்டி - நீ

நடந்து வருகையில் மயங்குறேண்டி


போன பிறகு குழம்புறேண்டி - நீ

போன பாதையில் புலம்புறேண்டி

தானாக்  கிடக்கிறேன்  வாயேண்டி  - அந்தத் 

தாயின் மடியைத் தாயேண்டி   


————————நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...