வியாழன், 25 மே, 2023

காபி ரெண்டு - குறுங்கதை

 காபி ரெண்டு - குறுங்கதை 

———————--------------------------

‘ ரெண்டு பேருக்கு மட்டும் காபி கொண்டு வந்துருக்கியே ‘

‘மூணு பேரு வந்துருக்கோம் , கண்ணு தெரியலையா ‘ .

குத்திக் காட்டினாள் வருங்கால மாமியார் .


‘ சொன்னேனே கேட்டியா , இப்ப பேச்சு வாங்கு ‘ என்று கிசு கிசுத்தாள் அம்மா .

‘ நீ சும்மா இரு அம்மா ‘ என்று அம்மாவை அடக்கினாள் சுதா .

‘இல்லே அத்தை , அவரு காபி குடிக்க மாட்டாருன்னு எனக்கும் தெரியும் ’ என்றாள் .

அலுவலகத்தில் பேசி வைத்து அவனை முறைப்படி பெண் பார்க்க வரச் சொன்ன அவளுக்குத் தெரியாதா அவனைப் பற்றி .


—————-நாகேந்திரபாரதி


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...