வெள்ளி, 26 மே, 2023

சூரிய நிலாக்கள் - கவிதை

 சூரிய நிலாக்கள் - கவிதை 

———————--------------------------

அவளைப் பிரிந்து

அமைதி  இழந்து 


தனிமை வாட்ட 

துயரைக் கூட்ட


கண்கள் பொங்க

கவலை தங்க


தூக்கம் போக்கும்   

துன்பம்  ஆக்கும் 


ஒவ்வொரு இரவும்

உயரச் சந்திரன்


சூரியனாய் மாறி

சுட்டுத் தகிக்கிறான்


——————-நாகேந்திர பாரதி 

My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

ஒரு ஓடை நதியாகிறது - கவிதை

 ஒரு ஓடை நதியாகிறது - கவிதை  ———————-------------------------———— விழுந்த இடத்தில் வெறும்  ஓடை தான் நடந்து போனால் தான் நதியென்ற பேர் கிட்டும...