சூரிய நிலாக்கள் - கவிதை
———————--------------------------
அவளைப் பிரிந்து
அமைதி இழந்து
தனிமை வாட்ட
துயரைக் கூட்ட
கண்கள் பொங்க
கவலை தங்க
தூக்கம் போக்கும்
துன்பம் ஆக்கும்
ஒவ்வொரு இரவும்
உயரச் சந்திரன்
சூரியனாய் மாறி
சுட்டுத் தகிக்கிறான்
——————-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சிரமம் தான்....
பதிலளிநீக்கு