ஒரு நதியின் பயணம் - கவிதை
—————————-----------------------—
கடலில் தொடங்கி
கடலில் முடியும்
வழியில் பார்த்த
வாழ்க்கை எத்தனை
விண்ணில் ஏறி
விழுந்த இடத்தில்
பொங்கிப் புடைத்துப்
புரண்டு சுருண்டு
நீண்டு நடந்து
ஓடிக் களைத்து
அடங்கும் வரைக்கும்
ஆட்டம் எத்தனை
கருவில் தொடங்கிக்
கரையும் வரைக்கும்
இருக்கும் வாழ்வின்
இன்ப துன்பம்
நதியின் பயண
நாட்டியம் தானே
நடந்து முடியும்
நாடகம் தானே
————-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
ஆம்...
பதிலளிநீக்குஅருமை...