போதி மரப் புத்தகங்கள் - கவிதை
————————————----------------------
மஞ்சள் பையோடு நடந்து போவது
அது யார் , அப்பாவா
சங்கீத ஓசைக்குத் தலையாட்டிச் செல்வது
அது யார், தாத்தாவா
சிரங்குப் புண்ணுக்கு மருந்து தடவுவது
அது யார், அப்பத்தாவா
தோசையைச் சுட்டுத் தட்டிலே வைப்பது
அது யார் , அம்மாச்சியா
திருக்குறள் பாடம் தெளிவாக நடத்துவது
அது யார். தமிழய்யாவா
புகைப்படல மாய்த் தெரிந்து
போய் மறைந்து போனாலும்
போதி மரப் புத்தகமாய்ப்
புனர் வாழ்வு தந்தவர்கள்
——————நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சிறப்பு...
பதிலளிநீக்கு