நீ பாதி நான் பாதி - கவிதை
————————------------------—
இடதா வலதா
என்பதெல்லாம் தெரியாது
உன்னில் பாதியென்ற
உண்மை மட்டும் தான் தெரியும்
சேர்ந்த நாள் முதலாய்ச்
சிதையும் நாள் வரைக்கும்
இன்பம் துன்பம் என்று
இருக்கும் எல்லாமே
பகிர்ந்து மகிழ்கின்ற
பக்குவம் தான் தெரியும்
——-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
இது போதுமே...!
பதிலளிநீக்கு