கண்ணீர் கசிகிறது - கவிதை
————————----------------------—
உடலும் உயிரும்
ஒன்றாய் இருக்கையில்
கடலின் அலையாய்க்
கலந்து திளைக்கையில்
பேச்சில் பிறந்த
பெருமை போனதா
சொல்லில் தெறித்த
சுவைகள் போனதா
நடந்து வருகையின்
நாணம் போனதா
வீச்சு விழியின்
வீரியம் போனதா
கன்னத்தில் மின்னிய
கர்வம் போனதா
எண்ணத்தில் இருந்த
எல்லாம் போனதா
மண்ணுக் குள்ளே
மறைந்து போனதா
மறக்க முடியா
நினைவாய் ஆனதா
—————-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சோதனை...
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு