சனி, 4 மார்ச், 2023

கிராமத்துக் கீறல்கள் - கவிதை

 கிராமத்துக் கீறல்கள் - கவிதை 

-----------------------------------------

பூப்பூத்த மறுநாளே 

காய்காய்க்கும் கல்யாணம் 


புடவைக்குள் தொலைந்திட்ட 

தாவணியின் விளையாட்டு 


வேர்விட்ட செடிக்கிங்கு 

விழுதுகளின் பொறுப்புகள் 


விளக்குக்கு ஏற்றிவிட்ட 

சூரியனின் சுடுநெருப்பு 


இறப்புக்குத் தப்பித்து 

இருக்கின்ற பெண்ணிவளின் 


இளமையினைப் பலியாக்கும் 

இரக்கமில்லாக் கிராமங்கள் 

-----------------------------------நாகேந்திர பாரதி 

My Poems/Stories in Tamil and English 


2 கருத்துகள்:

அணிலின் திகைப்பு - குறுங்கதை

 அணிலின் திகைப்பு - குறுங்கதை  ————————-----------------------------——- அந்த அணில் திகைப்போடு இங்கும் அங்கும் பார்த்தது . ‘என்ன ஆனது இங்கிரு...