கிராமத்துக் கீறல்கள் - கவிதை
-----------------------------------------
பூப்பூத்த மறுநாளே
காய்காய்க்கும் கல்யாணம்
புடவைக்குள் தொலைந்திட்ட
தாவணியின் விளையாட்டு
வேர்விட்ட செடிக்கிங்கு
விழுதுகளின் பொறுப்புகள்
விளக்குக்கு ஏற்றிவிட்ட
சூரியனின் சுடுநெருப்பு
இறப்புக்குத் தப்பித்து
இருக்கின்ற பெண்ணிவளின்
இளமையினைப் பலியாக்கும்
இரக்கமில்லாக் கிராமங்கள்
-----------------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சூப்பர் கவிஞரே
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்கு