பலி பீடம் - கவிதை
——————------------------—
வெளிச்சக் கண்ணாடியில்
வெளுத்துத் தெரிந்தாலும்
விரட்டி வருகின்ற
வேட்கைப் பல்லிகள்
இரையைப் பிடிக்க
இறங்கிச் சென்றுவிட்ட
கறுப்புப் பல்லிக்காய்
காலத்தை நிறுத்தி விட்டு
கழன்று வந்தன
கடிகார முட்கள்
———-நாகேந்திர பாரதி
அருமை...
பதிலளிநீக்கு