ஆசை - கவிதை
--------------------------------
காலைத் தூக்கத்தைக்
கட்டிப் பிடித்துக் கொண்டு
போர்வைச் சுமையை
இழுத்துப் போர்த்திக் கொண்டு
விட்ட கனவை
விடாமல் பிடித்தபடி
சோம்பேறி சுகத்தில்
சொக்கிக் கிடந்தபடி
உடற்பயிற்சி செய்ய
ஆசையாக இருக்கிறது
-------------------------------நாகேந்திர பாரதி
அருமை...
பதிலளிநீக்கு