உள்ளே வெளியே
-----------------------------
சும்மா இருக்கின்ற
சுகத்தைக் காண்பதற்கும்
எல்லாம் ஒன்றென்ற
இயல்பைக் காண்பதற்கும்
காலமும் தூரமும்
கலக்கக் காண்பதற்கும்
உடலும் உயிரும்
உருகக் காண்பதற்கும்
வெளியே இருந்து
உள்ளே வர வேண்டும்
------------------------------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக